ராபர்ட் வதோரா 5_ஆவது முறையாக ஆஜர்….அமுலாக்கத்துறை தொடர் விசாரணை…!!

Default Image
  • சட்ட விரோத பண பரிமாற்றம் செய்ததாக ராபர்ட் வதோரா மீது அமுலாக்கத்துறையினர் வழக்குப்பதிவு.
  • நேற்றுவரை ராபர்ட் வதோரா 5_ஆவது முறையாக அமுலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் சோனியா காந்தியின் மருமகனும் , பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதோரா சட்ட விரோதமாக லண்டனில் சொத்து வாங்கி, சட்டவிரோத பண பரிமாற்றம் நடைபெற்றதாக கூறி அமலாக்கத்துறையினர் ராபர்ட் வதோரா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர்.இந்நிலையில் ஏற்கனவே பலமுறை அமுலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் கடந்த 20-ந்தேதி வரை மட்டும் 4 முறை ஆஜராகிய வதேரா 5-வது முறையாக நேற்று மீண்டும் அமலாக்கத்துறை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு ஆஜராகினார்.இந்த வழக்கில் வதேராவை நீதிமன்றம் கைது செய்ய தடை விதித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்