பஞ்சாப் : தீப்பிடித்து எரிந்த பேருந்துகள் – ட்ரைவர் ஒருவர் உயிரிழப்பு..!

Default Image

பஞ்சாப் மாநிலம் பதிண்டா மாவட்டத்தில் உள்ள பக்தா பாய் கா  மாவட்டத்தில் உள்ள மூன்று பேருந்துகள் தீ பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்தின் போது, பேருந்திற்குள் நடத்துனர் குரு தேவ் சிங் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்துள்ளார்.

மேலும், இருவரும் மற்ற பேருந்திற்குள் காவலுக்காக நின்று கொண்டிருந்துள்ளனர். தீ எரிய ஆரம்பித்ததும் அவர்கள் இருவரும் லாவகமாக குதித்து உயிர் தப்பியுள்ளார். உள்ளே தூங்கிக்கொண்டிருந்த குறு தேவ் சிங் பரிதமாக கருகி உயிரிழந்துள்ளார்.

அவர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. விபத்தில் எரிந்த மூன்று பேருந்துகளில் இரண்டு பேருந்துகள் புதிதாக வாங்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. இந்த தீ விபத்துக்கான காரணம் என்ன என்று தெரியாத நிலையில், இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த தடவிய நிபுணர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்