மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் ஒத்திவைப்பு.!

Following the submission of the economic study, the Lok Sabha was adjourned till Monday

பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்த பின்னர் மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

நாடாளுமன்ற மக்களவையில் இன்று பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையுடன் தொடங்கியது. பின்னர் 2020 -21 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். இன்று முதல் பிப்ரவரி 30-ஆம் தேதி வரை முதல் அமர்வும், மார்ச் 8 முதல் ஏப்ரல் ஆம் தேதி வரை 2வது அமர்வு நடத்தப்படுகிறது.

இந்நிலையில், பொருளாதார ஆய்வறிக்கையை மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையிலும் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன். அடுத்த நிதியாண்டில் பொருளாதாரம் 11% வளர்ச்சியடையும் என அறிக்கையில் கணக்கிடப்பட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது. மேலும், பொருளாதார ஆய்வறிக்கையில் திருக்குறள் இடம்பெற்றுள்ளது.

பொருளென்னும் பொய்யா விளக்கம் இருள் அறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று என்ற குரல் இடம்பெற்றுள்ளது. இதையடுத்து, மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையும் பிப்.1-ஆம் தேதி திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.