பஸ், ரயிலை இயக்கலாம் – எடியூரப்பா அதிரடி அறிவிப்பு.!

Default Image

கர்நாடகாவில் பஸ், ரயிலை இயக்க அனுமதி என்று அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு அறிவித்து உள்ள நாடு முழுவதுமான 3-ம் கட்ட ஊரடங்கு நேற்று நள்ளிரவு 12 மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், வரும் 31ம் தேதி பொது முடக்கத்தை நீட்டிப்பு செய்துள்ளது. இந்த நான்காவது கட்ட ஊரடங்கிற்கான விரிவான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. மேலும், சிவப்பு, மஞ்சள், பச்சை மண்டலங்கள் எவை என்பதை மாநில அரசுகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் மாநிலங்களுக்குள் பேருந்துகளை இயக்குவதை அந்தந்த மாநில அரசுகளே முடிவு செய்து அறிவிக்கலாம் என்றும் தெரிவித்தது. 

இந்நிலையில், கர்நாடகாவில் 3 வது ஊரடங்கு நேற்று முடிவடையும் தருவாயில் மேலும் 2 நாள் அதாவது மே 19 நள்ளிரவு வரை நீட்டித்து அம்மாநில அரசு நேற்று உத்தரவிட்டது. தற்போது, கர்நாடகாவில் பஸ் மற்றும் ரயில் சேவைக்கு அம்மாநில முதல்வர் எடியூரப்பா அனுமதி வழங்கியுள்ளார். கொரோனா பாதிப்பு குறைவான பகுதிகளில் போக்குவரத்தை இயக்கலாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், சலூன் உள்ளிட்ட அனைத்து தனிக்கடைகளையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனிடையே கர்நாடகாவில் கொரோனாவால் 1147 பேர் பாதிக்கப்பட்டு, 37 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்