தொடரும் கைதுகள் ..!! இந்திய கடலோரத்தில் போதைப்பொருளுடன் பிடிபட்ட பாகிஸ்தானியர்கள் !
![14 Pakistani Arrest](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2024/04/14-Pakistani-Arrestfile-image.webp)
NCB : இந்தியாவில், குஜராத் மாநிலத்தின் கடற்கரை எல்லையில் போதைப்பொருளுடன் 14 பாகிஸ்தானியர்கள் பிடிப்பட்டுள்ளனர்.
போதை பொருள் கட்டுப்பட்டு பணியகம் (Narcotics Control Bureau) மற்றும் குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு படை (Anti-Terrorism Squad – ATS) இணைந்து நடத்திய ஒரு நடவடிக்கையில் இந்தியாவின் குஜராத்தில் உள்ள சர்வதேச கடல் எல்லையின் அருகில் சுமார் 90 கிலோ போதைப் பொருளுடன் 14 பாகிஸ்தானியர்களை இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக உளவுத்துறையினரின் தொடர் தகவல்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு அதன் அடிப்படையில் நடத்திய இந்த சோதனையில் தற்போது 14 பாகிஸ்தான் வாசிகள் பிடிபட்டுள்ளனர். மேலும், இதே போல் இதற்கு முன்னும் இந்த ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் NCB மற்றும் இந்திய கடற்படை ஆகியோர் இணைந்து 3,132 கிலோ இதுவரை 1000 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள போதைப் பொருட்களைக் கைப்பற்றி உள்ளனர்.
இதில் அப்போது ஐந்து பேரை கடற்படையினர் கைது செய்தனர். அதில் பிடிபட்ட அந்த 5 பேரும் பாகிஸ்தான் அல்லது ஈரான் நாட்டை சேர்ந்தவர்கள் என்று NCB மற்றும் இந்திய கடற்படை சந்தேகிக்கப்படும் நிலையில் தற்போது இந்த கைதும் நடைபெற்றுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக தற்போது நடைபெற்ற கைதையும் சேர்த்து மொத்தம் 3 கைதுகள் NCB மற்றும் இந்திய கடற்படையினர் செய்த்துள்ளனர்.
இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் இந்திய கடற்படையுடன் இணைந்து போதை பொருள் கட்டுப்பட்டு நிர்வாகமும் (NCB) மேற்கொண்டது. அதில் முதலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் குஜராத் கடற்கரையில் ஒரு கப்பலில் இருந்து 221 கிலோ மெத்தம்பேட்டமைனை (Methamphetamine) கைப்பற்றினார்கள் . அதன் பின் அதே ஆண்டியின் அக்டோபர் மாதத்தில் கேரள கடற்கரைக்கு அருகே ஒரு கப்பலில் இருந்து மற்றொரு 200 கிலோ உயர்தர போதை பொருளான ஹெராயினை கைப்பற்றினர்.
அதை தொடர்ந்து 2-வதாக கடந்த ஆண்டின் மே மாதத்தில் பாகிஸ்தானில் இருந்து வந்த ஒரு கப்பலில் இருந்து சுமார் 12,000 கோடி ரூபாய் மதிப்புள்ள 2500 கிலோ மெத்தாம்பெட்டமைனை போதை பொருள் கட்டுப்பட்டு பணியகம் (NCB) கைப்பற்றியது. இதனால் அந்த போதைப்பொருளான மெத்தாம்பெட்டமை இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகளில் உள்ள ட்ரக் கார்டெல்களிடம் (Drug Cartel) வந்து சேர்வதற்கு முன்பே முன்பு இந்திய பெருங்கடலில் தடுத்து நிறுத்தப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி – உள்துறை அமைச்சகம் உத்தரவு.!
February 13, 2025![Manipur - President](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Manipur-President.webp)
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!
February 13, 2025![tn govt](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tn-govt.webp)
விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!
February 13, 2025![ICC Conduct](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ICC-Conduct.webp)
மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!
February 13, 2025![Kannadi Poove - Retro](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Kannadi-Poove-Retro-.webp)
தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?
February 13, 2025![Vidaamuyarchi Ott Release](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Vidaamuyarchi-Ott-Release.webp)
“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!
February 13, 2025![ragupathy](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/ragupathy.webp)