விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை! இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு!

Default Image

நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திராயன்-2 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. அதிலிருந்து ஆர்பிட்டர் பகுதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சுற்றி தொடர் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. ஆர்பிட்டர் பகுதியிலிருந்து நிலவின் தரைப்பகுதியில் ஆராய்ச்சி செய்வதற்காக அனுப்பப்பட்ட விக்ரம் லேண்டர் துரதிர்ஷ்டவசமாக நிலவில் தரையிரங்குகையில், நிலவின் தரைக்கு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் போது இஸ்ரோவுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

பின்னர்,  ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டரை தீவிரமாக தேடி இஸ்ரோ களம் இறங்கியது. மேலும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையுடன் சேர்ந்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவும் இந்தப் பணியில் இறங்கியது. ஆனாலும், விக்ரம் லேண்டரை தொடர்புகொள்ள முடியவில்லை.

இந்நிலையில், இஸ்ரோ தலைவர் சிவன் தற்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், ‘ நிலவில் தரையிறக்கப்பட்ட விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆனால், ஆர்பிட்டர் பகுதி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.’ என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்