நித்யானந்தா ஆக்ரோஷம்.! குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் முட்டாள்கள்..!

- தன் மீது குற்றம் சாட்டுபவர்கள் முட்டாள்கள் என்றும் தாமே மனிதத்தின் எதிர்காலம் என்றும் நித்யானந்தா கூறியுள்ளார்.
- கைலாசா என்பது எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகளை போடப்பட்டு அவர் எங்கே இருக்கிறார் என்று தேடி வருகிறார்கள். ஆனால் நித்தியானந்தா அவரது பேஸ்புக் பக்கத்தில் தினமும் அவரது சீடர்களுக்கு அறிவுரை வழங்கியும் தரிசனமும் கொடுத்து வருகிறார்.இந்நிலையில் தற்போது நித்தியானந்தா ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் தாம் ஒரு உண்மையான கைலாசத்தை தான் உருவாக்கி வருகிறேன் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஸ்ரீகைலாசா ஒரு நாட்டின் குடியுரிமை அல்ல எனவும் கைலாசா என்பது எல்லைகளற்ற ஆன்மீக பெருவெளி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் செல்லப்பிராணிகளையும் கைலாசாவில் இணைக்கலாம் என்றும் அவற்றுக்கும் சிறப்பு பரிசுகள் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மற்றும் தன் மீது குற்றம் சாட்டுபவர்கள் அனைவரும் முட்டாள்கள் என்றும் தானே மனித குலத்தின் எதிர்காலம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025