மும்பை துறைமுகம் : 125 கோடி மதிப்புள்ள 25 கிலோ போதைப்பொருள் பறிமுதல்!

Default Image

மும்பை துறைமுகத்தில் 125 கோடி மதிப்புள்ள 25 கிலோ போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில்  போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில் கப்பலில் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்ட சிலரையும் போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால், தொடர்ந்து அம்மாநில அதிகாரிகள் போதை பொருள் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மும்பை துறைமுகத்தில் உள்ள கப்பல் ஒன்றில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 25 கிலோ போதைப் பொருளை வருவாய்த்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். மும்பையில் உள்ள நஹவஷேவா துறைமுகத்தில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 25 கிலோ ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த போதைப்பொருள் 125 கோடி ரூபாய் மதிப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக தொழில் அதிபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்