லக்கிம்பூர் கேரி:விவசாயிகள் உயிரிழந்த விவகாரம்…விசாரணை ஆணையம் அமைப்பு- உ.பி. அரசு..!

லக்கிம்பூர் கேரி விவசாயிகள் போராட்டத்தில் 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு, ஒரு நபர் ஆணையத்தை உத்தர பிரதேச அரசு அமைத்துள்ளது.
உத்தர பிரதேசத்தின் லக்கிம்பூர் மாவட்டத்தில் மாநில துணை முதல்வர், மத்திய இணை அமைச்சர் ஆகியோர் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சிக்கு அருகே மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகள் பேரணியாக சென்று கொண்டிருந்தனர். அப்போது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆஷிஷின் பாதுகாப்பிற்காக உடன் சென்ற கார் விவசாயிகள் மீது மோதியதாக கூறப்படுகிறது.
கார் மோதியதில் 4 விவசாயிகள் உட்பட 8 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து தொடர்ந்து நடைபெற்ற வன்முறையில் பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, லக்கிம்பூர் வன்முறைக்கு பல தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இதனால், லக்கிம்பூர் வன்முறையில் உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்ற போது போலீசார், பிரியங்கா காந்தியை அந்த கிராமத்திற்குள் அனுமதிக்காமல் கிராம எல்லையிலேயே போலீசார் கைது செய்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவும் செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேற்று லக்கிம்பூர் செல்ல இருந்த நிலையில் உத்தரபிரதேச அரசு அனுமதி மறுத்தது. பின்னர், லக்கிம்பூர் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி வழங்கப்பட்டு அவர்களுடன் மேலும் 3 பேர் மட்டும் செல்ல அனுமதி வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து,பிரியங்கா காந்தி சீதாபூரிலிருந்து நேரடியாக லக்கிம்பூர் சென்றடைந்தார்.அதேபோல் ,ராகுல் காந்தி நேற்று இரவு 7.45 மணிக்கு லக்கிம்பூர் சென்றடைந்தார்.இந்த சந்திப்பின் போது லவ்ப்ரீத்தின் குடும்பத்தினருடன் துக்கத்தைப் பகிர்ந்துகொண்டனர்,அதன்பின்னர்,ராகுல் காந்தி நீதி கிடைக்காத வரை, இந்த சத்தியாகிரகம் தொடரும் என்று ட்விட்டரில் கூறியிருந்தார்.
இதற்கிடையில்,விவசாயிகளின் போராட்டத்தில் கார் புகுந்த வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதனால்,விவசாயிகளின் உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் எழுந்து வருகிறது.
இந்நிலையில்,லக்கிம்பூர் கேரி விவசாயிகள் போராட்டத்தில் 8 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு, ஒரு நபர் ஆணையத்தை உத்தர பிரதேச அரசு அமைத்துள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி பிரதீப்குமார் ஸ்ரீவஸ்தவா தலைமையில் இந்த ஆணையத்தை உ.பி. அரசு அமைத்துள்ளது.மேலும், விசாரணையை முடித்து இரண்டு மாதத்தில் அறிக்கை தரவும் ஆணையத்துக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : 1,000 முதல்வர் மருந்தகங்கள் திறப்பு முதல்… ரேகா குப்தா தலைமையிலான டெல்லி சட்டப்பேரவை வரை.!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025
ஜெயலலிதாவுடன் உரையாடும் வாய்ப்பை பெற்றிருந்தது என்னுடைய கௌரவம்! பிரதமர் மோடி பதிவு!
February 24, 2025
NZvBAN : தடுமாறிய பங்களாதேஷ்..தூக்கி நிறுத்திய ஜாகிர் அலி! நியூசிலாந்துக்கு வைத்த இலக்கு..
February 24, 2025
தோல்வியை சந்தித்த விடாமுயற்சி…சீக்கிரம் ஓடிடிக்கு வந்த முக்கிய காரணம்?
February 24, 2025
தவெக-வில் இணைகிறாரா காளியம்மாள்? அறிக்கையில் ‘இதை’ கவனித்தீர்களா?
February 24, 2025