லடாக் தாக்குதல்.! மேலும், 17 ராணுவ வீரர்கள் படுகாயம்.! 20 வீரர்கள் பலி.!

Default Image

இந்திய – சீன ராணுவ வீரர்களிடையே நடந்த தாக்குதலில் இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும், 17 வீரர்கள் பலத்த காயமடைந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

இந்திய சீனா எல்லை பகுதிகளில் ஒன்றான லடாக் எல்லைபகுதியில், இரு நாட்டு ராணுவத்திற்கும் இடையே நீண்ட நாட்களாக போர்பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே சண்டை ஏற்பட்டதில் இரு தரப்பிலும் ராணுவ வீரரர்கள் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக இந்திய ராணுவ வீரர்கள் இருவரும், ஒரு ராணுவ அதிகாரியும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

அதன் பின்னர் இன்று இரவு வெளியாக தகவலின் படி, இந்திய ராணுவம் தரப்பில் சுமார் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது மேலும், 17 வீரர்களுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்