ஹைதிராபாத்தில் அடுத்து அரங்கேறிய கொடூரம்! தங்கை கண்முன்னே அக்கா பாலியல் வன்கொடுமை!

Default Image
  • ஹைதராபாத் நெடுஞ்சாலையில் பெண் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி எரித்து கொல்லப்பட்ட சம்பவம் சென்ற மாதம் அரங்கேறியது.
  • தற்போது 18 வயது இளம் பெண் தன் தங்கை முன்னே ஆட்டோ டிரைவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

ஐதராபாத் : ஹைதராபாத் – பெங்களூரு நெடுஞ்சாலையில் கால்நடை மருத்துவர் பிரியங்கா ரெட்டி  சென்றமாதம் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொல்லப்பட்டார். அந்த சம்பவத்தில் ஈடுபட்ட நான்கு பேரும் விசாரணையின்போது தப்பிக்க முயன்றதால் சுட்டு கொல்லப்பட்டனர்.

அந்த வடு ஆறுவதற்குள் அடுத்த பாலியல்  வன்கொடுமை சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹைதராபாத்தில் ஒரு 18 வயது இளம்பெண்ணும் அந்த பெண்ணின் 10 வயது தங்கையும் தங்கள் பாட்டி வீட்டிற்கு செல்ல வந்துள்ளனர். ஆனால், அவர்களுக்கு ஹைதராபாத்தில் வழி தெரியவில்லை. இதனை பயன்படுத்தி கொண்ட ஆட்டோ டிரைவர்கள் அன்வர் மற்றும் பெரோஸ் ஆகியோர் அந்த இளம் பெண்ணையும் அவரது தங்கையையும் அழைத்துக்கொண்டு ஒரு லாட்ஜிற்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்று தங்கை கண்முன்னே 18 வயது இளம்பெண்ணை இருவரும் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதற்கிடையில் அந்த இளம் பெண்ணையும் 10 வயது சிறுமியையும் காணவில்லை என பெற்றோர்கள் தேடி வந்துள்ளனர். பின்னர் வன்கொடுமை செய்யப்பட்ட அந்த பெண் தனது தங்கையுடன் தப்பித்து சென்று பெற்றோர்களுக்கு போன் செய்து தான் இருக்கும் இடத்தை கூறி பெற்றோரிடம் சென்றுள்ளனர். அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆட்டோ டிரைவர்கள் அன்வர், பெரோஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டு தற்போது போலீஸ் விசாரணையில் உள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly
thangam thennarasu tn assembly
CM MKStalin