ஹிமாச்சலப்பிரதேசத்தில் செப்டம்பர் 21 வரை வழக்கமான பள்ளிகள் இடைநிறுத்தம்..!

Default Image

ஹிமாச்சலப்பிரதேசத்தில் செப்டம்பர் 21 ஆம் தேதி வரை வழக்கமான பள்ளிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ஹிமாச்சலப்பிரதேச மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதை அடுத்து, இமாச்சல பிரதேச அரசு இன்று தெரிவித்துள்ளதாவது, மாநிலத்தில் குடியிருப்பு பள்ளிகள் தவிர அனைத்து பள்ளிகளும் செப்டம்பர் 21 வரை மூடப்படும். கொரோனா நிலைமை காரணமாக இமாச்சலப் பிரதேச அரசு வழக்கமான வகுப்புகளுக்கு செப்டம்பர் 21 வரை இடைநிறுத்தியுள்ளது.

இம்மாநிலத்தில் கடந்த ஆகஸ்ட் 2 முதல் 9-12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது. இது குறித்து இமாச்சலப் பிரதேச மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் திங்கள்கிழமை பிற்பகல் உத்தரவுகளை வெளியிட்டது.  ஹிமாச்சலப்பிரதேசத்தில் உள்ள பள்ளிகளில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை தற்போது ஆன்லைனில் முதல் பருவத் தேர்வுகள் எழுதப்படுகின்றன.

இருப்பினும், காரோண நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருவதால் ஒரு வாரத்திற்கு மீண்டும் வழக்கமான பள்ளிகள் நிறுத்தப்பட்டுள்ளன. குடியிருப்பு பள்ளிகள் சமூக இடைவெளியை பராமரித்தல், முகமூடி அணிதல் போன்ற கொரோனா நெறிமுறைகளைப் பின்பற்றி வழக்கம்போல் வகுப்புகள் தொடரும்.

இன்றுவரை, மாநிலத்தில் 2,15,893 பேர் கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே நேரத்தில் தொற்று காரணமாக 3,623 பேர் இறந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்