ஹத்ராஸ் வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு விசாரணை 10 நாட்களுக்கு நீட்டிப்பு – யோகி ஆதித்யநாத்

Default Image

உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் நடந்த பாலியல் பலாத்கார வழக்கு விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டது. ஆனால் விசாரணையை பத்து நாட்களுக்கு நீட்டிக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து, இன்று உத்தரபிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர் அவனிஷ் அவஸ்தி கூறுகையில், யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின்படி சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வழங்கப்பட்ட காலம் தற்போது பத்து நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக் குழு பாதிக்கப்பட்ட பெண்ணின் கிராமம் மேலும், அவர் தீக்குளித்த இடம் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ளது. தடயவியல் நிபுணர்களும் அந்த நேரத்தில்  சிறப்பு புலனாய்வு குழுவுடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்