ஓடிப்போன காதலர்களுக்கு நூதன தண்டனை வழங்கிய குடும்பத்தினர் கைது..!

Default Image

21 வயது ஆணும், 19 வயது பெண்ணும் தப்பியோடியதற்கான தண்டனையாக கழுத்தில் மோட்டார் சைக்கிள் டயர்களுடன் நடனமாட செய்துள்ளனர்.

நாட்டில் பல அதிர்ச்சிகரமான நிகழ்வுகள் நடக்கின்றன. இது போன்ற ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மத்திய பிரதேசத்தில் ஒரு சம்பவம் நடந்தது. 21 வயது ஒரு ஆணுடன் ஓடிப்போன, 19 வயது இளம் பெண்ணும், அவளுக்கு உதவிய இளம் பெண்ணின் சகோதரி( மைனர்) ஆகிய மூன்று பேரை பெண்ணின் குடும்பத்தினர் மூவரின் கழுத்திலும் மோட்டார் சைக்கிள் டயர்களைத் தொங்கவிட்டு பொது இடங்களில் பாடல்களுக்கு ஆட கட்டாயப்படுத்தினர்.

இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து தார் மாவட்டத்தில் உள்ள காந்த்வானி காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. 19 வயது சிறுமியின் தந்தை, அவரது சகோதரர் மற்றும் உறவினர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 254, 323, 506, 354, 363, 343 மற்றும் 147 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தார் மாவட்ட எஸ்பி ஆதித்யா சிங் கூறுகையில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஐந்து பேரில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்