குடியரசுத்தலைவர் வருகைக்காக நொய்டாவில் ட்ரோன்கள் பறக்க தடை.!

Default Image

குடியரசுத்தலைவர் வருகையை முன்னிட்டு நொய்டாவில் நவம்பர் 2 வரை, ட்ரோன் கேமராக்களை பறக்க தடை விதித்துள்ளது.

நவ-1 ஆம் தேதி உத்தர பிரதேச மாநிலம், நொய்டாவில் உள்ள கவுதம புத்தநகரில் நடைபெறவுள்ள ஏழாவது “இந்தியா தண்ணீர் வாரம்” நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு வருகை தரவுள்ள இந்திய குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு மற்றும் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோரின் பாதுகாப்பு கருதி நொய்டாவில் ட்ரோன் கேமராக்களை பறக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

தடையை மீறி செயல்பட்டால் இ.பி.கோ பிரிவு 188இன் படி தண்டிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் செப்டம்பரில் பிரதமர் மோடியின் வருகைக்காக இதே போல் ட்ரோன்களை பறக்க தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்