டெல்லியில் பரபரப்பு.! தனியார் மருத்துவமனைக்குள் புகுந்து மருத்துவர் சுட்டுக்கொலை!

அறைக்குள் புகுந்து மருத்துவரை சுட்டுக்கொன்று தலைமறைவான குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Shot Dead doctor

டெல்லி: ஜெய்த்பூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை மருத்துவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது. காயத்துடன் சிகிச்சைக்கு வந்த 2 இளைஞர்கள் இந்த வெறிச்செயலை செய்துள்ளனர்.

காயத்திற்கு கட்டுப்போட்ட பின், மருத்துவரை சந்திக்க வேண்டும் என கூறிய இளைஞர்கள் அவரது அறையில் சந்தித்து சுட்டுக்கொன்றனர்.

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட விவகாரத்தில் மருத்துவர்கள் பாதுகாப்பு கோரி நாடு முழுவதும் போராட்டம் நடந்து வந்த நிலையில், தலைநகர் டெல்லியிலேயே இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.

சம்பவம் நடந்த சிறிது நேரத்துக்குப் பிறகு, மாவட்ட குற்றப்பிரிவு மற்றும் எஃப்எஸ்எல் ரோகினி குழுவினர் சம்பவம் நடந்த இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். தலைமறைவான குற்றவாளிகளைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது, மருத்துவமனை வளாகத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளில் குற்றம் சாட்டப்பட்ட இருவரும் மருத்துவமனையை விட்டு வெளியேறும் காட்சிகள் பதிவாகியுள்ளது. அதன் அடிப்படையில், போலீசார் விசாரணையை தொடங்கியுள்னர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்