ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடன்கள் தள்ளுபடி.!

Default Image

கடன் நிலுவை வைத்துள்ள விவசாயிகளுக்கு 4 தவணைகளாக தள்ளுபடி தொகை வழங்கப்படும் என்று தெலுங்கானா நிதி அமைச்சர் ஹரீஷ் ராவ் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தின் கீழ் ரூ.25,000 நிலுவை வைத்துள்ள 5 லட்சத்து 83 ஆயிரம் விவசாயிகளின் கடன் ஒரே அடியாக முடித்து வைக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

இதற்காக மாநில அரசு ஆயிரத்து ரூ.198 கோடி ஒதுக்கீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் கடன் தள்ளுபடி தொகை தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வழியாக விவசாயிகளிடம் நேரடியாக காசோலையாக வழங்கப்படும் என்றும் ரூ.1 லட்சம் வரையிலான கடனை தள்ளுபடி செய்ய மாநில அரசுக்கு மொத்தம் ரூ.24,738 கோடி தேவைப்படும் என்று தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்