நாடு முழுவதும் 46,711 பேருக்கு கொரோனா பாதிப்பு.! 1,583 பேர் உயிரிழப்பு.!

Default Image

நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,711 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாகத்தான் நாடு முழுவதும் 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் தினமும் கொரோனா தொடர்பான  நிலவரத்தை மத்திய சுகாதாரத்துறை அறிவித்து வருகிறது. அதன்படி, நாடு முழுவதும் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 46,711 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,583 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்ட 46,711 பேரில் இதுவரை 13,161 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதனிடையே கடந்த 24 மணி நேரத்தில் 195 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதேபோல் 3,900 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என்றும் 1,020 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து உள்ளதாகவும் தெரிவித்திருந்தனர். நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 14,541 பேர் பாதிக்கப்பட்டு, 583 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து குஜராத்தில் 5804, டெல்லியில் 4898, தமிழ்நாட்டில் 3550, ராஜஸ்தானில் 3061, மத்திய பிரதேசத்தில் 3049 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்