தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவியில் கொரோனா பலி 9-ஆக உயர்வு.!

Default Image

இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை இந்தியாவில் 12,759 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 420 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர்.
இதில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகளவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளது. இங்கு இதுவரை 2,919 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 187 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.
அம்மாநிலத்தில் தற்போது கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட இடமாக மும்பை நகரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான தாராவி பகுதி மாறிவருகிறது. இங்கு இதுவரை 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பலி எண்ணிக்கை 9-ஆக உயர்ந்துள்ளது. மக்கள் மிக நெருக்கமாக வசித்து வரும் இப்பகுதியில் கொரோனா மேலும் பரவும் அபாயம் நிலவுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்