ரூ.100 வைத்தால் போதும் கண்களை மூடிக் கொண்டு மதிப்பெண் வழங்குவார்.! மாணவர் எடுத்த அதிரடி முடிவு.!

Default Image
  • தேர்வுக்கு முன்பாக நடந்த மாணவர்களுக்காக ஆலோசனை கூட்டத்தில் பள்ளி ஆசிரியர் மாணவர்களிடையே தவறாக பேசியதை மாணவர் அம்மாநிலம் குறைதீர் என்ற இணையதளத்தில் புகார் அளித்து ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.

உத்தர பிரதேசம் மாநிலம் மவு நகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தனியார் பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர் பிரவீன் என்பவர் தேர்வுக்கு முன்னதாக மாணவர்களுக்கு ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்றாகும். அதுபோன்று இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளி முதல்வர் பேசுகையில், தேர்வு அறையில் தேர்வு எழுதும்போது நீங்கள் உங்களுக்குள் பேசிக்கொண்டு விடை எழுதலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் இதையடுத்து அரசு பள்ளி தேர்வு மையங்களில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் எனது நண்பர்கள் தான், அதனால் ரூ.100 விடைத்தாளில் வைத்தால் போதும் ஆசிரியர்கள் கண்களை மூடிக்கொண்டு மதிப்பெண்கள் வழங்குவார்கள் என்று தெரிவித்துள்ளார். பின்னர் இதை அங்கிருந்த மாணவர் ஒருவர் தனது செல்போனில் படம் பிடித்து, உத்தர பிரதேசத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் மக்கள் குறைதீர் என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்து புகார் ஒன்று அளித்துள்ளார். இதைப்பார்த்து விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள் ஆசிரியரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிகழ்வை புகார் தெரிவித்த மாணவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்