கொரோனாவால் உயிரிழந்த துப்புரவு தொழிலாளர்! நேரில் சென்று ஆறுதல் கூறி ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய டெல்லி முதல்வர்!

Default Image

கொரோனாவால் உயிரிழந்த துப்புரவு தொழிலாளர்க்கு ரூ.1 கோடி நிதியுதவி.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், டெல்லியில், இந்த கொரோனா வைரஸால், 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இதில் 30-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களும் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், வடக்கு டெல்லி மஞ்சு-கா-டில்லா பகுதியை சேர்ந்த ராஜு என்ற துப்புரவு பணியாளர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ராஜுவின் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறி, அவர்களுக்கு ரூ.1 கோடிக்கான காசோலையையும் அளித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்