இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேத்தன் சவுகான் கொரோனாவால் உயிரிழந்தார்.!

Default Image

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் முன்னாள் எம்பியுமான 73 வயது நிரம்பிய சேத்தன் சவுகான் உயிரிழந்தார்.

கடந்த ஜூலை மாதம் முதல் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பாஜக முன்னாள் எம்பியுமான 73 வயது நிரம்பிய சேத்தன் சவுகான் கொரோனா சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று உயிரிழந்தார்.

முதலில், லக்னோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், பின்னர் குருகிராமினில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவர் 1991 மற்றும் 1998 ஆம் ஆண்டுகளில் உத்தரபிரதேசத மாநில  அம்ரோஹாவில் தொகுதியில் மக்களவை இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும், இவர் 1981 ஆம் ஆண்டில் அர்ஜுனா விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சேத்தன் சவுகான் இந்திய கிரிக்கெட் அணிக்காக 12 ஆண்டுகள் விளையாடியுள்ளார். முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் உடன் பல போட்டிகளில் வலுவான தொடக்கத்தினை கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்