ஒரு ஆண்டு என நிர்ணயிக்கப்பட்ட சந்திராயன்-2 ஆர்பிட்டார் ஆய்வுப்பணியை 7 ஆண்டுகள் வரை தொடரும் – இஸ்ரோ விஞ்ஞானிகள்!

Default Image

சந்திராயன் 2 விண்கலத்தின் ஆர்பிட்டார் 7 ஆண்டுகள் வரை ஆய்வு பணியை தொடரும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

உலகிலேயே முதல் முறையாக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திராயன்-2 என்னும் விண்கலத்தை கடந்த ஆண்டு ஜூலை 22 ஆம் தேதி விண்ணில் ஏவியிருந்தது. தரையிறங்குவதில் தோல்வியைத் தழுவி இருந்தாலும் இந்த விண்கலம் நிலவின் சுற்றுப்பாதையில் கடந்த ஒரு ஆண்டாக ஆய்வுகள் மற்றும் தரவுகளை நல்ல முறையில் அனுப்பி வருகிறது. இந்நிலையில் இது குறித்து இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவில் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக அனுப்பபடும் விண்கலத்தின் ஆய்வு பணிக்காக பொருத்தப்பட்டிருந்த ஆர்பிட்டார் எனும் நவீன கருவி மற்றும் அதிலுள்ள எக்ஸ்ரே ஸ்பெக்ட்ரோமீட்டர், சிந்தடிக், கேமராக்கள் ஆகிய எட்டு விதமான ஆய்வு கருவிகள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஓராண்டில் மட்டுமே சந்திராயன் 2 விண்கலம் 4 ஆயிரத்து 400 க்கும் மேற்பட்ட முறை நிலவை சுற்றி வந்து பல்வேறு தகவல்களை சேகரித்து தந்துள்ளது. இந்நிலையில் சந்திராயநில உள்ள ஆர்பிட்டர் எனும் நவீன கருவியின் ஆய்வுக் காலம் ஓராண்டு என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்பொழுது அதில் எரிபொருள் அதிக அளவு இருப்பதால் இது ஏழு ஆண்டுகள் வரையிலும் தனது ஆய்வு பணியை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது என இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்