கொரியர், கேபிள், DTH, ஆன்லைன் வர்த்தகம் ஆகியவை இயங்கலாம்.!

Default Image

நாடு முழுவதும் நேற்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கை மேலும் 19 நாட்களுக்கு நீடித்து மே 3 வரை ஊரடங்கு தொடரும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பின்னர் ஏப்ரல் 20 ம் தேதி பின்பு நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் என்றும் அதற்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று வெளியிடப்படும் என தெரிவித்தார்.
அதன்படி, மே 3 ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்கனவே இருந்த தடை தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், ஏப்ரல் 20 ம் தேதி பின்பு நிபந்தனைகளுக்குட்பட்டு, பிளம்பர், எலெக்ட்ரீஷியன், தச்சுவேலை, மோட்டார் மெக்கானிக் தொழில் செய்வோர் ஆகியோருக்கு அனுமதி எனவும், கொரியர் நிறுவனங்கள், ஆன்லைன் வணிக நிறுவனங்கள் அத்தியாவசிய பொருட்களை மட்டும் விநியோகிக்க அனுமதி எனவும், கேபிள் டிவி, DTH சேவைகள் ஆகியவையும் இயங்கலாம் என உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்