கடந்த மார்ச் மாதம் முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில்,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், குறிஞ்சி என். சிவகுமார் அவர்களைத் தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்குத் தலைவராக நியமித்து கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஆணையிட்டார். இந்நிலையில்,சென்னை தலைமை செயலகத்தில் குறிஞ்சி என். சிவகுமார், முதல்வர் ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது: “50 ஆண்டுகால அரசியல் அனுபவத்துடன் முதல்வர் அவர்கள் […]
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் புதிய தலைவர் நியமனம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவிப்பு விடுத்துள்ளார். தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்குப் புதிய தலைவராக குறிஞ்சி திரு.என்.சிவகுமார் அவர்களை நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும்,இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்: “தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் 4.10.2007 அன்று அப்போதைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் துவக்கப்பட்ட நிறுவனம் ஆகும். இந்நிறுவனம், தனது சேவையைத் துவங்குவதற்கு முன்னர், ஒரு […]
நாடு முழுவதும் நேற்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கை மேலும் 19 நாட்களுக்கு நீடித்து மே 3 வரை ஊரடங்கு தொடரும் என்று பிரதமர் மோடி அறிவித்திருந்தார். பின்னர் ஏப்ரல் 20 ம் தேதி பின்பு நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் என்றும் அதற்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று வெளியிடப்படும் என தெரிவித்தார். அதன்படி, மே 3 ஆம் தேதி வரை கல்வி நிலையங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், அரசியல் நிகழ்வுகள், வழிபாட்டுத்தலங்கள், பயிற்சி மையங்கள் மற்றும் பொதுக்கூட்டங்களுக்கு ஏற்கனவே […]
புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தப்படுகிறது. மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவை கட்டணம் பற்றி சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது.அதில் வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ.153 .40 காசுகளுக்கு தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டது.மேலும் இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படிருந்தது. இதனிடையே டிராயின் இந்த புதிய கட்டண விதிகளுக்குதமிழக கேபிள் […]
புதிய கட்டண விதிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை கேபிள் டிவி ஒளிபரப்பு சேவை நிறுத்தப்படுகிறது. மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் கேபிள் மற்றும் டிடிஹெச் சேவை கட்டணம் பற்றி சமீபத்தில் ஒரு அறிவிப்பு வெளியிட்டது.அதில் வாடிக்கையாளர்கள் 100 இலவச சேனல்களையோ அல்லது கட்டண சேனல்களையோ ரூ.153 .40 காசுகளுக்கு தேர்வு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டது.மேலும் இந்த விதிமுறைகள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்படிருந்தது. இதனிடையே டிராயின் இந்த புதிய கட்டண விதிகளுக்குதமிழக கேபிள் […]
தமிழகத்தில் கேபிள் கட்டணம் உயர்கிறதா என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். இது குறித்து தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ தமிழகத்தில் கேபிள் கட்டணம் உயர வாய்ப்பே இல்லை என்றும் டிராய் நிறுவனத்தின் கட்டணத்துக்கு மத்திய அரசிடம் முறையிட்டு தற்போதைய கட்டணத்தையே தொடர்வோம் என்று தெரிவித்த அவர் தமிழகத்தில் எதிர்க்கட்சிகள் எதிரி கட்சிகளாக செயல்பட்டு ஆட்சியை குறைகூறி வருகின்றனர். அண்ணா வழியில் வந்தவர்கள் அண்ணாவின் கொள்கையை மறந்துவிட்டனர் என்று திமுகவை விமர்சித்துள்ளார்.