#BREAKING: நேஷனல் ஹெரால்ட் அலுவலகத்திற்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை!

Default Image

டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்ட் அலுவலகத்திற்கு சீல் வைத்தது அமலாக்கத்துறை.

டெல்லியில் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு அமலாக்க இயக்குனரகம் சீல் வைத்தது. முன் அனுமதியின்றி வளாகத்தை திறக்கக் கூடாது என்றும் யாரும் உள்ளே வரக்கூடாது எனவும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் நேற்று சோதனை நடத்திய நிலையில், இன்று சீல் வைக்கப்பட்டது. நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதை தொடர்ந்து  டெல்லியில் உள்ள ஏஐசிசி தலைமையகத்திற்கு வெளியே கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்திய நிலையில், தற்போது நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை முறைகேடாக யங் இந்தியா நிறுவனம் கைப்பற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்