#BREAKING: அமலாக்கத்துறை சம்மன்: கூடுதல் அவகாசம் கோரினார் ராகுல் காந்தி…!

Default Image

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராக கூடுதல் அவகாசம் கேட்கும் ராகுல் காந்தி.

நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் டெல்லி அமலாக்கத்துறையினர் இதுவரை 3 நாட்கள் விசாரணை நடத்தினர்.  மொத்தமாக 28 மணி நேரம் அமலாக்கத்துறை, ராகுல்காந்தியிடம் விசாரணை நடத்திய நிலையில், வரும் வெள்ளிக்கிழமை மீண்டும் ஆஜராக சம்மன் அனுப்பியிருந்தது.

இந்த நிலையில், அமலாக்கத்துறை விசாரணைக்காக ஆஜராக கூடுதல் அவகாசம் அளிக்குமாறு கோரி ராகுல் காந்தி கடிதம் அனுப்பியுள்ளார். தன் தாயார் சோனியா காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதனால் ஆஜராக தனக்கு கூடுதல் அவகாசம் தர அமலாக்கத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார் ராகுல் காந்தி. வரும் திங்கட்கிழமை வரை கால அவகாசம் அளிக்குமாறு அமலாக்கத்துறைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை வைத்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்