#BREAKING: ஆட்கொல்லி கொரோனாவால் இந்தியாவில் முதல் உயிரிழப்பு…

Default Image

அண்மை காலமாக உலகத்தையே அச்சுறுத்தி வரும் வைரஸ் கொரோனா .இந்த வைரஸ் சீனாவில் தொடங்கி தற்போது இந்தியா வரை பரவியுள்ளது.

இந்நிலையில் சவூதி அரேபியா நாட்டிற்கு சென்று வந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த 76 வயது முதியவர் இந்தியா திரும்பிய நிலையில் அவருக்கு கொரானா அறிகுறி இருந்துள்ளது. இதனை அடுத்து அவரை ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருக்கு காய்ச்சல் ,சளி போன்றவை இருந்ததால் கொரானா வைரஸ் இருக்கலாம் என்று சந்தேகத்தில் அவர் தொடர்  கண்காணிப்பிலும் இருந்தார்.இந்நிலையில் அவர் நேற்று முன்தினம்  சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில்  உயிரிழந்தார்.

அவர் உயிரிழப்பிற்கு கொரோனா வைரஸ்  காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இவரின் மரணத்திற்கான காரணத்தை  உறுதி செய்ய மருத்துவர்கள் பரிசோதனை செய்து வந்த நிலையில்  தற்போது அந்த முதியவர்  கொரோனா வைரசால் தான் இறந்தார் என்பது உறுதியாகியுள்ளது.

இதனால் கொரோனாவால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்