#BREAKING: பஞ்சாப்பின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பதவியேற்றார்!

With the Assembly elections coming up next year, Charanjit Singh Channi of the Congress party has been registered as the new Chief Minister of Punjab.

அடுத்தாண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி பதிவியேற்றார்.

பஞ்சாப்பில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அம்மாநிலத்தின் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, நேற்று சண்டிகரில் நடைபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தில், அம்மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வானார்.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட காங்கிரஸ் கட்சியின் சரண்ஜித் சிங் சன்னி பதிவியேற்றார். சண்டிகரில் உள்ள ராஜ்பவனில் சரண்ஜித்துக்கு அம்மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித பதவி பிரமாணம் செய்து வைத்தார் என்பது குறிப்பிடப்படுகிறது.