நெருங்கி வரும் சுதந்திர தினம்..ஊடுருவ முயன்ற நபரை சுட்டு கொன்ற எல்லை பாதுகாப்பு படை.!

Default Image

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் அருகிலுள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையில் எல்லை பாதுகாப்பு வேலி மீது இன்று  ஒரு பாகிஸ்தனை சார்ந்த ஒரு நபர் ஊடுருவ முயன்றபோது எல்லை பாதுகாப்பு படையால் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர் வேலியைக் கடந்து மறுபுறம் சென்றபோது  வீரர்கள் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதையடுத்து, அவர் ஒரு புதருக்குப் பின்னால் ஒளிந்து கொண்டார். பின்னர், அந்த பகுதியைத் தேடியபோது  அந்த நபர் இறந்து கிடந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் அதிகாலை 1 மணியளவில் எல்லையில் உள்ள பகாசர் பகுதியில் நடந்துள்ளது என்று அவர்கள் தெரிவித்தனர்.

நாட்டில் நடைபெறவிருக்கும் சுதந்திர தின கொண்டாட்டங்களை கருத்தில் கொண்டு  எல்லை பாதுகாப்பு படை மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஊடுருவ முயன்ற நபரை அடையாளம் காணுமாறு பாக்கிஸ்தான் ரேஞ்சர்களிடம்  எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கேட்டுள்ளது என்றும், பாகிஸ்தான் பதிலளித்த பின்னர் அவர் குறித்து மேலும் விவரங்கள் கிடைக்கப் பெறும் என்றும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், பாக்கிஸ்தான் தரப்பில் நடமாட்டத்தை எல்லை பாதுகாப்பு படை கவனித்து வருகிறது என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்