மேற்கு வங்கத்தில் ரயிலில் பயணித்த ஒரு பயணியை சக பயணி ஒருவர் தள்ளிவிட்ட சம்பவ வீடியோ வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
மேற்கு வங்கத்தில் ஒரு ரயில் பயணியை சக ரயில் பயணி தள்ளிவிட்டு விட்டார். இந்த ஷாக்கிங் சம்பவத்தை அதே ரயிலில் பயணித்த ஒரு நபர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விட்டார்.
ஹவுரா-மால்டா டவுன் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயிலில் சஜல் ஷேக் எனும் பயணி பயணித்துள்ளார். அதே ரயிலில் பயணித்த ஒரு பயணி ஷேக் உடன் சண்டையிட்டு உள்ளார்.
அப்போது நடைபெற்ற வாக்குவாதத்தில் ஷேக்கை அந்த பயணி ரயில் வாசலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதனால், ஷேக் தண்டவாளத்தில் பயங்கர காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தை ஒருவர் வீடியோ எடுத்து சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுவிட்டார். அந்த விடியோவை கொண்டு, ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தில் சம்பந்தப்பட்ட அந்த நபரை போலீசார் கைது செய்தனர்.
unknown node