உ.பியில் கொடூரம்… தாய், மனைவி, 3 குழந்தைகளை கொடூரமாக கொலை செய்த போதை ஆசாமி.!

Uttar Pradesh Murder Case in Sitapur

Uttar Pradesh : உத்திர பிரதேசத்தில் தாய், மனைவி, 3 குழந்தைகளை கொலை செய்து தற்கொலை செய்து கொண்டான் ஒரு போதை ஆசாமி.

உத்திர பிரதேசத்தில் தனது குடும்பத்தை சேர்ந்த 5 பேரை கொடூரமாக கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட மதுபோதை ஆசாமியின் செயல் அப்பகுதியை உலுக்கியுள்ளது. சீதாபூர் மாவட்டம் பாலபூர் கிராமத்தில் மதுபோதைக்கு அடிமையாகி இருந்துள்ளான் அனுராக் சிங் எனும் 45 வயது மதிக்கத்தக்க நபர்.

PTI செய்தி நிறுவன தகவலின்படி, அனுராக் மதுபோதைக்கு அடிமையாகிவிட்டதால், அவனை மறுவாழ்வு மீட்பு மையத்தில் சேர சொல்லி குடும்பத்தார் அடிக்கடி சொல்வார்கள் என்றும் இதனால் அவர்கள் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது என காவல்துறை விசாரணையில் கூறப்படுகிறது.

நேற்று இரவு , மதுபோதையில் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்த அனுராக் சிங், தனது தாய் சாவித்திரியை சுட்டு கொன்றுள்ளான். அடுத்து, தனது மனைவி பிரியங்காவை சுத்தியலால் அடித்து கொலை செய்துள்ளான். பின்னர் அந்த கொடூரன், 12 வயதான தனது மகள் அஸ்வினி , 9 வயதான அர்னா , 6 வயதான அத்விக் என தனது 3 குழந்தைகளையும் 3வது மாடியில் இருந்து தூக்கி எறிந்துளான். 

இதில், ஆத்விக் மட்டும் அப்போது உயிருடன் இருந்துள்ளான். உடனடியாக ஆத்விக்கை மீட்ட அக்கம் பக்கத்தினர், லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ஆத்விக் உயிரிழந்துள்ளான். இதற்கிடையில் அனுராக் சிங் தன்னை தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளான். 

தற்போது சீதாபூர் போலீசார், இறந்த உடல்களை மீட்டு பிரேதபரிசோதனை செய்து பின்னர், கிராமத்தினரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனது தாய், மனைவி, 3 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட போதை ஆசாமி அனுராக் சிங்கின் செயல் அப்பகுதியினரை பதைபதைக்க வைத்துள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்