இந்தியாவில் 96.88 கோடி வாக்காளர்கள்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!

election commission of india

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு இம்மாதம் இறுதி அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் அறிவித்து, ஏப்ரல், மே மாதத்தில் மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவை தேர்தலுக்கான பணியில் தலைமை தேர்தல் ஆணையம், மாநில தேர்தல் ஆணையமும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதன்படி, மக்களவை தேர்தலில் வாக்காளர்களுக்கு விரலில் வைக்கும் அழியாத “மை” தயாரிக்கும் பணி இன்று தொடங்கியுள்ளது. மறுபக்கம், கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு மற்றும் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்டவை தொடர்பாக பிரதான அரசியல் கட்சிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில், நாடு முழுவதும் 96.88 பேர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலைவிட வரும் நாடாளுமன்ற தேர்தலில் 6% வாக்காளர்கள் அதிகம் உள்ளனர். இந்தியாதான் உலகின் அதிக வாக்காளர்களை கொண்ட நாடு என தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

இந்தியா கூட்டணியில் இருந்து மேலும் ஒரு கட்சி விலகியது!

இதுபோன்று, மாற்றுத்திறனாளிகள் 88.35 லட்சம் பேர், புதிய வாக்காளர்கள் 2.63 கோடி பேர் உள்ளனர். புதிய வாக்காளர்களில் 1.41 கோடி பேர் பெண்கள், 17 வயது நிறைவடைந்த உடனே பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை 10.64 லட்சம் பேர் ஆவர்.  18 முதல் 19 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் 1.84 கோடி பேர் உள்ளனர். 20 முதல் 29 வயதுக்கு உட்பட்ட வாக்காளர்கள் 19.74 கோடி பேர் உள்ளனர்.

மொத்தமாக ஆண் வாக்காளர்கள் 49.72 கோடியும், பெண் வாக்காளர்கள் 47.15 கோடியும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேர் உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மறைந்த வாக்காளர்கள் 67.82 லட்சம் பேரை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. நிரந்தரமாக இடம்மாறி சென்ற 75.11 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்றும் இரு இடங்களில் பெயர் பதிவான 22.05 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளது எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்