ஒடிசாவில் பேருந்து மீது லாரி மோதியதில் 6 பேர் பலி!

Default Image

ஒடிசாவில் பேருந்து மீது லாரி மோதியதில் ஜேஎஸ்டபிள்யூ ஆலை ஊழியர்கள் 6 பேர் பலி, 20க்கும் மேற்பட்டோர் காயமமடைந்தனர்.

ஒடிசாவின் ஜார்சுகுடா-சம்பல்பூர் பிஜு விரைவுச் சாலையில் நிலக்கரி ஏற்றிச் சென்ற டிரக் ஒன்று பேருந்து மீது மோதியதில் ஜேஎஸ்டபிள்யூ ஆலை ஊழியர்கள் 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

“பெரும்பாலான ஊழியர்கள் பலத்த காயம் அடைந்துள்ளதாகவும், 14 பேர் ஜார்சுகுடாவில் சிகிச்சை பெற்று வருவதாகவும்” ஜார்சுகுடா டிஎஸ்பி என் மொஹபத்ரா தெரிவித்தார்.

மேலும் தீவிர சிகிச்சைக்காக 10 பேர் சம்பல்பூரில் உள்ள புர்லா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்