6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால், ஆக்ரா கோட்டை நாளை முதல் திறப்பு.!

Default Image

கொரோனா தொற்று அச்சத்தால் 6 மாதங்களுக்குப் பிறகு தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை நாளை முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

17 – ஆம் நூற்றாண்டின் அன்பின் நினைவுச்சின்னம், தாஜ்மஹால் மற்றும் ஆக்ரா கோட்டை ஆகியவை கொரோனா தொற்றுநோயால் ஆறு மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில், நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறை அதிகாரிகள் தாஜ்மஹால் மற்றும் ஆக்ராவை மீண்டும் திறக்க தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

தாஜ்மஹாலின் பராமரிப்பாளர் அமர் நாத் குப்தா கூறுகையில்,  கிழக்கு மற்றும் மேற்கு வாசல்களில் சுத்திகரிப்பு, வெப்பத் திரையிடல் மூலம் பயணிகளை சோதிக்கப்படு, சமூக இடைவெளி தூரத்தை பின்பற்றியும் முகக்கவசம் அணிந்தும் உள்ளெ அனுமதிக்கப்படுகிறது. மேலும், ஒரே இடத்தில் 2,500 பார்வையாளர்கள் மட்டுமே கல்லறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் இது ஆன்லைன் முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது .

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்