இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 34 பேர் உயிரிழப்பு..909 பேர் பாதிப்பு.!

Default Image

கடந்த 24 மணிநேரத்தில்  இந்தியாவில் கொரோனாவால் 906 பேர் பாதிக்கப்பட்டு, 34 பேர் உயிரிழப்பு என சுகாதாரத்துறை இணை செயலர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 34 பேர் உயிரிழந்துள்ளார்கள். அதேபோல் 906 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 20 சதவிகிதம் பேருக்கு தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது என்று கூறியுள்ளார். மேலும் 1,671 கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன், தீவிர சிகிச்சை தேவைப்படுவதாக குறிப்பிட்டுள்ளார். 

மேலும் இதுவரை 1,89,906 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். நேற்று ஒரே நாளில் மட்டும் 17,143 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 8,356 பேர் பாதிக்கப்பட்டு, 273 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சிகிச்சை பெற்று வந்த 716 பேர் குணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்