கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 31 பேர் பலி..1,211 பேர் பாதிப்பு.!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்து வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய இருந்த நிலையில், மே 3 ஆம் தேதி வரை நீடிப்பதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இதனிடையே இந்தியாவில் இதுவரை 10363 பேர் பாதிக்கப்பட்டு, 339 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1036 பேர் குணமடைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் கொரோனா வைரசால் 31 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்றும் 1,211 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து ஒரே நாளில் 117 பேர் குணமடைந்துள்ளார்கள் என்றும் கூறியுள்ளது. மேலும் நாடு முழுவதும் இதுவரை 2,31,902 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்