சிறகடிக்க ஆசை சீரியல் ..ஸ்ருதியின் அம்மாவால் தெரியவரும் உண்மைகள்..!

sirakadikka asai 5

சிறகடிக்க ஆசை இன்று –விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான [ஜூலை 5] கதைக்களத்தை இங்கே காணலாம்.

ரவியும் ஸ்ருதியும் கேக்கோட வீட்டுக்குள்ள வராங்க.. இதை பார்த்த பாட்டி என்னடா இது அப்படின்னு கேக்குறாங்க .அதுக்கு ரவி சொல்றாரு உங்க பிறந்தநாளுக்கு தான் பாட்டி கேக்னு  சொல்றாங்க. பாட்டி இதெல்லாம் எதுக்குடா அப்படின்னு கேக்குறாங்க.. கேட்கும்போதே ரோகிணி வந்துறாங்க வாங்க பாட்டி உங்களுக்கு மேக்கப் பண்ணி விடுறேன்னு சொல்றாங்க பாட்டி அதெல்லாம் வேண்டாம் சொல்றாங்க..

ஆனா ரோகிணி எப்படியோ கெஞ்சி லைட்டா டச் அப் மட்டும் பண்ணிக்கலாம் பாட்டி வாங்கன்னு சொல்லவும் பாட்டியும் சரின்னு போறாங்க. இப்ப மேக்கப் பண்ணிட்டு இருக்கும்போது பாட்டி ரோகினி ஓட குடும்பத்தை விசாரிக்கிறாங்க.. மீனா ஸ்ருதியோட குடும்பம் இன்னைக்கு வருவாங்க ..ஆனா உன்னோட குடும்பத்தில் இருந்து யாரும் வரதில்ல அவங்களோட போட்டோவ  காட்டுனு சொல்றாங்க..

Ravi shuruthi

இப்ப ரோகினி சொல்றாங்க அப்பா மேல இருந்த கோவத்துல போட்டோ எல்லாம் எடுத்துட்டு வர மறந்துட்டேன் பாட்டினு சொல்றாங்க.. இப்ப ரோகினி மனசுல நினைச்சுக்கிறாங்க எதுக்கு தான் இந்த பாட்டியை கூப்பிட்டு வந்தோம் அப்படின்னு. வாய மூடுங்க அப்படின்னு சொல்றாங்க.. பாட்டி உடனே அதிர்ச்சியா என்னம்மா இப்படி சொல்றனு கேக்குறாங்க.. இல்ல பாட்டு லிப்ஸ்டிக் போடணும் கொஞ்சம் வாயை மூடுங்க என்று சொல்கிறாங்க.

அதெல்லாம் வேண்டாமா வாய்க்கு வெத்தலை போட்ட மாதிரி இருக்கும்னு சொல்றாங்க.. இல்ல லைட்டா தான் போடலாம் அப்படின்றாங்க. இப்ப ஒரு வழியா மேக்கப் பண்ணி முடிச்சு இரண்டு பேரும் செல்பி எடுத்துக்கிறாங்க. இப்போ அண்ணாமலையோட பிரண்டு பரசு குருக்களை கூப்பிட்டு வீட்டுக்கு வராங்க .பாட்டி கேக்குறாங்க என்னப்பா பூஜை நடக்க போகுதா அப்படின்னு.

ஆமாமா உங்களுக்கு தான்.. 80 வயசு கடந்து வந்திருக்கிறீங்க இல்ல எத்தனை விஷயங்களை பார்த்து வந்திருப்பீங்க அதுக்காக தான் அம்மா அப்படின்னு சொல்றாங்க.. நம்ம குடும்பமே தலைச்சு நிக்கிறதுக்கு நீங்க தான்மா காரணம் நீங்க போட்ட விதைதான் அப்படின்னு சொல்லவும், விஜயா மனோஜ் கிட்ட சொல்றாங்க ஆமா உங்க பாட்டி போட்ட விதைல தான் நம்ம எல்லாம் முளைச்சு வந்திருக்கோம் அப்படின்னு நக்கலா சொல்றாங்க..

meena (1)

இப்போ அண்ணாமலை முத்துக்கு கால் பண்ண சொல்றாரு மீனா கால் பண்றாங்க ..ஆனா முத்து எடுக்கல.. இப்ப பூஜையை ஸ்டார்ட் பண்ணிட்டாங்க பாட்டிக்கு அம்மன் மேல சாத்துனா புடவையை கிப்ட்டா அண்ணாமலை கொடுக்குறாரு.. இப்போ எல்லாரும் ஆசீர்வாதம் வாங்கறாங்க பாட்டிகிட்ட.. மீனா   அவர் வந்துரட்டும்னு   தயக்கத்தோடு சொல்றாங்க.. அண்ணாமலை சொல்றாரு அவன் வரும்போது வரட்டும் நீ  வாமானு சொல்றாரு.

இப்போ  பூஜை முடிச்சுட்டு குருக்கள்  கிளம்பிடறாங்க.. அதோட பரசும்  கிளம்புறாரு. இப்ப மீனா கிச்சன்ல நிக்கிறாங்க .பாட்டி ஏமா உனக்கு முத்தூக்கும் சண்டையா ஏன் நீங்க ரெண்டு பேருமே ஒரு மாதிரி இருக்கீங்கன்னு கேக்குறாங்க. மீனா சொல்லுறாங்க  அதெல்லாம் ஒன்னும் இல்ல பாட்டி. சரி நீ போய் குளிச்சிட்டு ரெடி ஆகு அப்படின்னு சொல்றாங்க .இல்ல பாட்டி  இன்னும் வேலை முடியல.நா   விஜயாவ பாக்கசொல்லுறேன்னு   சொல்றாங்க..

Sutha

இப்போ பார்வதி டிவியை தூக்க முடியாம தூக்கிட்டு வராங்க அதை பார்த்த விஜயா புன்னகையோட வாபார்வதின்னு சொல்றாங்க ரவி அந்த டிவியை தூக்கி மேல கொண்டு வராரு.. இத பாத்த எல்லாரும் சந்தோஷப்படுறாங்க. விஜயா சொல்றாங்க அத்தைக்கு தான் டிவியை பரிசா கொடுக்க போறேன்னு சொல்றாங்க அண்ணாமலையும் பாட்டியும் ஆச்சரியத்தோடு இருக்கிறாங்க .

ஆனா மனோஜ் சொல்றாரு உங்க பையன் நானே ஷோரூம் வச்சிருக்கேன் நீங்க என் கடையை விட்டுட்டு அடுத்த கடையில் போய் வாங்கி இருக்கீங்க எனக்கு அது அசிங்கமா இருக்காதா அப்படின்னு கேக்குறாரு. அதுக்கு ரவி சொல்றாரு உன்னோட ஷோரூம் ல வாங்குனா நீ என்ன ரேட் கொடுப்பனு  கேக்குறாரு. நான் எம்ஆர்பி ரேட்டுக்கு தான் கொடுப்பேன் . அப்போ எங்க எடுத்தா என்ன அப்படின்னு ரவி  சொல்லவும் மனோஜ் எதுவுமே சொல்லல இதோட இன்னைக்கு எபிசோடு முடிந்தது.

நாளைக்கு  ப்ரோமோல சுருதியோட அம்மா வராங்க ..வந்து மீனா கிட்ட முத்துவ  விசாரிக்கிறாங்க.. மீனா சொல்றாங்க அவரு  வெளியில போயிருக்கிறார், அப்படின்னு சொல்லவும் இன்னைக்கு கூட அவர் வேலைக்கு போய் இருக்காரு ஆனா நீ ஏமா கவரிங் நகை போட்டு இருக்க அப்படின்னு சுதா  சொல்லவும் எல்லாரும் அதிர்ச்சியை  பார்த்துட்டு இருக்காங்க .. நாளைக்காவது எல்லாருக்கும் உண்மை தெரியுமான்னு பாக்கலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்