தர்சனிடம் மன்னிப்பு கேட்ட வனிதா அக்கா! எதற்காக தெரியுமா?

Default Image

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில், லொஸ்லியா, முருகன், சாண்டி மற்றும் ஷெரின் நான்கு பெரும் இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமார், எதாவது ஒரு விதத்தில் மற்றவர்கள் மத்தியில் பிரச்சனையை ஏற்படுத்தி விடுகிறார்.
இந்நிலையில், லொஸ்லியா-கவின், தர்சன்-ஷெரின், அபிராமி-முகன் என இவர்கள் மத்தியில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில், கடந்த வரம் தர்சன் அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இவரது வெளியேற்றம் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனையடுத்து, மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற வனிதா, தர்சன் வெளியே சென்றதற்கு காரணம் ஷெரின் தான் என கூறியுள்ளார். இதனையடுத்து ஷெரின் கதறி அழுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்தியில், அனைவருமே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தனர். அப்போது வனிதா சகோதர உணர்வோடு தர்சனின் நெற்றியில் முத்தம் கொடுத்து அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்