எனது நடிப்பை பலரும் பாராட்டுவதற்கு இது தான் காரணம் : நடிகை சாய் பல்லவி

Default Image

நடிகை சாய் பல்லவி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது சினிமா வாழ்க்கை குறித்து ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, ‘ கேமரா முன்னாள் என்னையும் உலகையும் மறந்து விடுவேன். நான் நடிக்கும் கதாபாத்திரம் மட்டுமே ஞாபகத்தில் இருக்கும். நான் சகஜமாகவும், யதார்த்தமாகவும் நடிப்பதாக பலரும் கூறுவதற்கு காரணம் இது தான்.
ஒரு படத்தில் நடிக்கும் பொது நான் அந்த கதாபாத்திரமாகவே மாறி விடுவேன். எனது நடிப்பை யார் பாராட்டினாலும், அதற்கு காரணம் நான் தான் என்று மொத்த பலனையும் ஏற்றுக் கொள்ள மாட்டேன். ஒரு படம் தயாராக நுற்றுக்கணக்கானோரின் கஷ்டமும், உழைப்பும் இருக்கிறது. எனக்கு கிடைக்கும் பெயருக்கு பின்னால் எத்தனை பேர் உழைப்பு இருக்கிறது என்பதை நான் மறக்காமல் அவர்களை ஞாபகத்தில் வைத்துக் கொள்வேன்.’ என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்