சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படமானது பிரபல நடிகரான சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். இப்படம், ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா நரசிம்ம ரெட்டி வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில், அமிதாப்பச்சன், தமன்னா, விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படம் தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இதனையடுத்து நடிகர் சிரஞ்சீவி இந்த திரைப்படத்தை பார்ப்பதற்காக, தெலுங்கானா ஆளுநராக தமிழிலிசைக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்றுக் கொண்ட தமிழிசைக்கு இந்த படத்தினை காண்பித்துள்ளார். இப்படத்தை பார்த்த தமிழிசை சிரஞ்சீவியை பாராட்டியுள்ளார்.
சைரா நரசிம்ம ரெட்டி படத்திற்காக சிரஞ்சீவியை பாராட்டிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை!
சைரா நரசிம்மா ரெட்டி திரைப்படமானது பிரபல நடிகரான சிரஞ்சீவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம். இப்படம், ராயலசீமாவில் வாழ்ந்த சுதந்திர போராட்ட வீரர் உய்யவலாடா