திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். இந்நிலையில், 80 மணிநேர போராட்டத்திற்கு பின் குழந்தை சடலமாக மீட்கப்பட்டான்.இதனையடுத்து, குழந்தையின் உயிரிழப்புக்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிற நிலையில், நடிகர் சதிஷ் தனது இணைய பக்கத்தில், ஒரு காட்டமான பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ‘அந்த மரண குழியை மூடாமல், அலட்சியமாக இருந்தவர்கள் தண்டிக்கப்படும் வரை, RIP என்பதற்கு அர்த்தமே இல்லை.’ என பதிவிட்டுள்ளார்.
unknown nodeRIP என்பதற்கு அர்த்தமே இல்லை! குழந்தை சுஜித் குறித்து பிரபல நடிகரின் காட்டமான பதிவு!
A post shared by Sathish (@actorsathish) on Oct 28, 2019 at 6:48pm PDT