ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம்

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத்  உயிரிழந்தான் .அந்த சமயத்தில் முதலமைச்சர் பழனிசாமி கூறுகையில், திமுக சார்பில் ரூ.10 லட்சம் சுஜித் குடும்பத்திற்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்த நிலையில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த குழந்தை சுஜித் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. சுஜித்தின் பெற்றோரிடம் அதிமுக சார்பில் … Read more

அமெரிக்காவில் கடந்த 32 ஆண்டுகளாக எந்த போர்வெல்லிலும் குழந்தை விழவில்லை! காரணம் இதுதானா?!

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை அருகே நடுகாட்டுப்பட்டியில் கடந்த 25-ஆம் தேதி மாலை வீட்டின் தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தவறி விழுந்த சுஜித்தை காப்பாற்ற மீட்புக்குழுவினர் 4 நாட்களுக்கு மேலாக கடந்தும் போராடி வந்தனர்.80 மணி நேரமாக நடைபெற்ற போராட்ட முயற்சி தோல்வி அடைந்து சிறுவன் இறந்து விட்டான். அமெரிக்காவில் கடந்த 1987 ஆம் ஆண்டு அக்டோபர் 14 ஆம் நாள் ஜெஸிகா என்ற ஒன்றரை … Read more

எதிர்க்கட்சி தலைவர் சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார்” – முதலமைச்சர் ட்வீட்

எதிர்க்கட்சி தலைவர் சுஜித் விவகாரத்தில் காழ்ப்புணர்ச்சியோடு பேசுகிறார் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தை கடந்த சில தினங்களாக உலுக்கிய சம்பவம் சுஜித் என்ற சிறுவனின் மரணம்.இந்த சிறுவனின் மரணம் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே.. சிறுவனின் மரணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் பழனிசாமி மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். மாண்புமிகு அமைச்சர் பெருமக்களும் அங்கேயே முகாமிட்டு மீட்பு பணியினை கண்காணித்து வந்தனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக சிறுவனை உயிருடன் மீட்க முடியவில்லை. … Read more

சுஜித் மீட்புக்கு செலவான உண்மையான தொகை இதுதான்- மாவட்ட ஆட்சியர்

சுஜித்தை மீட்க ரூ.11 கோடி வரை செலவு செய்யப்பட்டதாக செய்தி வெளியான நிலையில் இது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு விளக்கம் அளித்துள்ளார். கடந்த சில தினங்களாக தமிழகத்தை உலுக்கிய சம்பவம் ஆழ்துளை கிணற்றில் விழுந்து 2 வயது சிறுவன் சுஜித் உயிரிழந்தது தான்.இந்த  சிறுவன் ஆழ்துளை கிணற்றில் விழுந்தது முதல் தற்போது வரை சமூக வலைத்தளங்களில் பல்வேறு போலிச் செய்திகள் அதிகம் உலாவி வருகின்றது.குறிப்பாக சமூக வலைத்தளங்களில் ஒரு சிறுவன் நடனம் ஆடும் வீடியோ … Read more

சுஜித் மரணம் ! முதலமைச்சர் பதில் அளிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

குழந்தை சுஜித் மரணத்தில் எழுந்துள்ள கேள்விகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி உரிய பதில் அளிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தை கடந்த சில தினங்களாக உலுக்கிய சம்பவம் சுஜித் என்ற சிறுவனின் மரணம்.இந்த சிறுவனின் மரணம் குறித்து நாம் அனைவரும் அறிந்ததே.. சிறுவனின் மரணம் குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் முதலமைச்சர் பழனிசாமி மாறி மாறி கருத்து தெரிவித்து வருகின்றனர். சுஜித் மரணம் குறித்து ஸ்டாலின் கூறுகையில்,தமிழக அரசின் மீது மெத்தன போக்கே … Read more

ஓடி விளையாடு பாப்பா! இங்கு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இல்லையடி பாப்பா! : டி.இமான்

இசையமைப்பாளர் டி.இமான் பிரபலமான இசையமைப்பாளரும், பாடகரும் ஆவார். இவர் பல தமிழ் திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து  வருகின்றனர். இதனையடுத்து, பிரபல இசையமைப்பாளரும், பாடகருமான இமான் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதில், ‘ஓடி விளையாடு பாப்பா! இங்கு மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இல்லையடி … Read more

சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம் – விஜயகாந்த்

சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத்  உயிரிழந்தான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர். இந்த நிலையில் இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறுகையில்,சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம்.இதுபோன்றதொரு மரணம் மீண்டும் நிகழாவண்ணம் நாம் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். திறந்த நிலையில் … Read more

சுஜித்தின் குடும்பத்திற்கு அரசு சார்பில் ரூ 10 லட்சம், அதிமுக சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி- முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்பு

சுஜித்தின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ 10 லட்சம், அதிமுக சார்பில் ரூ 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டம் நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். சுஜித்தின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அதிமுக சார்பில் ரூ.10 லட்சம், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து … Read more

பெற்றோர் அல்லாத குழந்தையை தத்தெடுங்கள்! படிப்பு செலவு முழுவதும் நான் ஏற்றுக்கொள்கிறேன்! – ராகவா லாரன்ஸ் வாக்குறுதி!

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர். சுஜித் இரங்கல் குறித்து கருத்து தெரிவிக்கையில், ராகவா லாரன்ஸ் கூறுகையில், ‘ பெற்றோர் இல்லாத ஒரு குழந்தையை தத்தெடுத்து அச்சிறுவனுக்கு சுஜித் என பெயர் விடுங்கள். அச்சிறுவனின் கல்வி செலவு முழுவதையும் நான் ஏற்றுக்கொள்கிறேன். ‘ என தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சுஜித் உயிரிழந்த செய்தி கேட்டு வருந்துகிறேன் – ராகுல் காந்தி

சுஜித் உயிரிழந்த செய்தி கேட்டு வருந்துகிறேன் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத்  உயிரிழந்தான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர். I’m sorry to hear about the passing of baby Sujith. My condolences to his grieving parents and his family. #RIPSujith — Rahul Gandhi (@RahulGandhi) … Read more