ஹெல்மெட் அணியாமல் சென்ற தளபதி நடிகருக்கு அபராதம் விதித்த போலீசார்! அதே இடத்தில நடந்த அட்டகாசமான சம்பவம்!
திருச்சி மாவட்டம் லால்குடி பகுதியை சேர்ந்தவர் திருச்சி ரமேஷ். இவர் டிக் டாக் செயலி மூலம் புழ்பெற்றவர். அதன் பின் ரஜினிமுருகன், மெர்சல், விசுவாசம், சண்டைக்கோழி-2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றுள்ளார். அப்பகுதியில் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீசார் அவரை பிடித்து அவருக்கு ரூ.100 அபராதம் விதித்தனர். அதன் அவ்விடத்தை விட்டு கிளப்புவதற்காக தயாரான ரமேஷை போலீசார், ஹெல்மெட் விழிப்புணர்வு தொடர்பாக ஒரு வீடியோ போடலாமே கூறியுள்ளார்.
இதனையடுத்து, அவர் அதே இடத்திலேயே போலீசாருடன் இருந்து ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘நடிகராக இருந்தால் என்ன? நடிகர் கீழே விழுந்தால் தலையில் அடிபடாதா? செல்போனை பாதுகாக்க கவர் போடுறீங்க? உயிரை பாதுகாக்க தலைக்கு ஹெல்மெட் போடுவதில் என்ன பிரச்னை? எனக் கேட்டு சப் இன்ஸ்பெக்டர் என்னிடம் சத்தம் போட்டார்.அதன்பின் அபராதம் கட்டினேன்.
அத்துடன் இனிமேல் நான் எப்போதும் ஹெல்மெட் போட்டுதான் வண்டி ஓட்டுவேன். இதைப் பார்க்கும் நீங்களும் தயவுசெய்து ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள்’ என அறிவுரை கூறியுள்ளார்.