படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டும் வசூலை வாரிக்குவித்த பத்மாவத்!

14 நாட்களில் பத்மாவத் திரைப்படத்துக்கான வசூல்  225 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. பத்மாவத் திரைப்படம் வரலாற்றைத் திரித்து எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி ராஜபுத்திர

14 நாட்களில் பத்மாவத் திரைப்படத்துக்கான வசூல்  225 கோடி ரூபாயைக் கடந்துள்ளது. பத்மாவத் திரைப்படம் வரலாற்றைத் திரித்து எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறி ராஜபுத்திர அமைப்புகள் நாடுமுழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டதால் படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

unknown node

கடந்த மாதம் 25-ஆம் தேதி திரைப்படம் வெளியான நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட ராஜ்புத் கர்ணி சேனா உள்ளிட்ட அமைப்புகள் திரையரங்குகளை அடித்து நொறுக்கின.

unknown node

இந்நிலையில் கடும் போராட்டங்கள் மக்களின் ஆர்வத்தை தூண்டியதையடுத்து படத்தை பார்க்க திரையரங்குகளில் குவிந்தனர். இதைத்தொடர்ந்து அரங்குகள் நிறைந்த காட்சிகளுடன் படம் திரையிடப்பட்டு வரும் நிலையில் 14 நாட்களில் 225 கோடி ரூபாய் அளவிற்கு வசூலை வாரிக் குவித்துள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.