மீடு விவகாரத்தில் நடிகை பாலியல் தொல்லை பிரச்னையை நானும் சந்தித்துள்ளேன். பயம் காரணமாக நான் அதை வெளியில் சொல்லவில்லை’ என்று நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்துள்ளார்.
unknown nodeமீடூ சினிமா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி சமூகத்தில் வலம் வந்தது இதில் பல நடிகைகள் பலரும் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை மீடூ மூலம் பேச ஆரம்பித்துள்ளனர்.இந்த பேச்சை மீடூ மூலம் நடிகைகள் வெளியிட்டு வருகின்றனர்.இதே வகையில் சினிமாவில் நானும் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று மீடு லீஸ்ட்டில் நடிகை நிவேதா பெத்துராஜ் இணைந்துள்ளார்.
unknown nodeஇந்த மீடு குறித்து பல நடிகைகள் பாலியல் கொழுத்து போட்டு வரும் நிலையில் நடிகையும் மீடுவை பற்றி பேசியுள்ளார்.நடிகர் விஜய் ஆண்டனி மற்றும் நடிகை நிவேத்த பெத்துராஜ் இணைந்து நடித்துள்ள படம் தான் திமிரு புடிச்சவன் படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
unknown nodeஇதில் நடிகை நிவேதா பெத்துராஜிடம் மீடூ குறித்து கேட்கபட்டது அதற்கு பதில் அளித்த நிவேத்தா இந்த பிரச்னையில் நானும் தாங்க சிக்கியிருக்கிறேன். சிக்கியது எப்படி நா நான் ஒரு பார்டிக்கு சென்ற போது தான் அது நடந்தது. நான் துபாயில் வளர்ந்த பெண்ணாக இருந்தாலும் மதுராக்கார பொண்ணு மதுரையை தான் பூர்விமாக கொண்ட பக்கா தமிழ் பெண். எனக்கு வெட்கம் பயம் இந்த இரண்டின் காரணமாகத்தான் அந்த கொடுமையை வெளியில் சொல்லவில்லை. இது என் தப்பு தான். நான் அந்த பார்டிக்கு போயிருக்கவே கூடாது.போகாமலிருந்தா அந்த கசப்பான கொடுமையான ஒரு அனுபவத்தை சந்திக்காம இருந்திருக்கலாம்.பெண்களிடம் யாராவது தப்ப நடக்க முயன்றால் அதை அந்த இடத்திலே எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
unknown nodeஇப்போ அதுபோல சம்பவம் எனக்கு நடந்தால் என்ன செய்யவேண்டும் என்று எனக்கு நல்லவே தெரியும்.அந்த விஷயத்தில் நான் ரொம்ப தெளிவாக இருக்கேன்.மேலும் படத்தை பற்றி பேசிய நிவேத்தா திமிரு புடிச்சவன் படத்தில நான் சப்-இன்ஸ்பெக்டராக நடிச்சுருக்கேன். மோசமான போலீஸ் அதிகாரியாக இருந்த போலீஸ் பின் நல்லவராக மாறும் கேரக்டர் இந்த கதாப்பாத்திரத்துக்காக நா புல்லட்ல ஓட்டப் பயிற்சி பெற்றேன். படத்தில என் கதாபாத்திரம் முக்கியமானதாக இருக்கும் நீங்களும் பாருங்கள் என்றார்.
unknown nodeDINASUVADU