போதை பொருள் விவகாரம்: விசாரணைக்கு ஆஜரானார் இயக்குனர் அமீர்.!

Ameer

Ameer sultan: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் திரைப்பட இயக்குனர் அமீர் டெல்லி மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இன்று விசாரணைக்கு ஆஜராகியுள்ளார்.

டெல்லியில் இருந்து 2 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தலைமறைவாக இருந்த முன்னாள் தி.மு.க. நிர்வாகி ஜாபர் சாதிக்கை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கடந்த 9ஆம் தேதி கைது செய்தனர்.

இதையடுத்து விசாரணையை அதிகாரிகள் தீவிரப்படுத்திய நிலையில் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜாபர் சாதிக் திரைப்படங்களை தயாரித்ததும் தெரியவந்துள்ளது. இயக்குனரும், நடிகருமான அமீர் இயக்கத்தில் உருவான ‘இறைவன் மிகப்பெரியவன்’ என்ற திரைப்படத்தையும் ஜாபர் சாதிக் தயாரித்துள்ளார் என தெரிய வந்துள்ளளது.

இந்நிலையில், அமீர் கைதான ஜாபர் சாதிக்கின் நண்பர் என்பதும் இவரும் காபி ஷாப் ஒன்றை இணைந்து தொடங்கியதாகவும் தகவல் கிடைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குனர் அமீர் இன்றைய தினம் ஆஜராக, மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியது.

இதனையடுத்து, போதைப்பொருள் தடுப்பு பிரிவு அளித்துள்ள சம்மனை எதிர்கொள்ள தயார் என்று அமீர் தெரிவித்த நிலையில், தற்பொழுது டெல்லியில் உள்ள போதைப்பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் இயக்குனர் அமீர் ஆஜராகினார். விசாரணைக்கு ஆஜராகிய அமீரிடம் ஜாபர் சாதிக்குடனான தொடர்பு குறித்து அமீரிடம் விசாரணை நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 26032025
Today Live - 25032024
LPG Lorry Strike
thambi ramaiah manoj bharathiraja
shreyas iyer and rohit
US President Donald Trump
manoj bharathiraja and bharathiraja
ADMK Leaders meeti Amit shah - Edappadi Palanisamy says