Mamitha Baiju: இயக்குனர் பாலா சார் என்கிட்ட ஸ்ட்ரிட்டாலாம் இல்ல, யாரோ பார்த்த தவறான வேலை இது. சூர்யா படத்துல இருந்து விலகுனதுக்கு இதுதான் காரணம் என்று வணங்கான் பட சர்ச்சைக்கு நடிகை மமிதா பைஜூ முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
READ MORE –இளையராஜாவாக நடிக்க தனுஷ் கேட்ட சம்பளம்? அதிர்ந்து போன கோலிவுட் வட்டாரம்!!
வணங்கான் படத்தில் நடித்து கொண்டிருந்த போது, இயக்குனர் பாலா தன்னை அடித்ததாக 22 வயாதான மலையாள நடிகைமமிதா பைஜூ, ஒரு பரபரப்பான தகவலை பகிர்ந்து கொண்டார். இதனையடுத்து, பிரேமலு படத்தின் மூலம் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று கொண்டமமிதாவுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் பேச தொடங்கினர். கடந்த இரு தினங்களாக இது பற்றி பெரும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.
READ MORE –கணவர் கூட போனாலே ஏதாவது சொல்றாங்க! நடிகை ஸ்ரேயா சரண் வேதனை!
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மமிதா பைஜூ பேசிய காணொளி வீடியோவும் இணையத்தில் வேகமாக பரவு தொடங்கியது. இந்த நிலையில், இயக்குனர் பாலா தன்னை அடிக்கவில்லை என மமிதா பைஜூ தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்து கொண்டார். அதில் அவர் கூறியதாவது, ‘படப்பிடிப்பில் பாலா சார் மிக கவனமாக இருப்பார் என்பதை தான் நான் கூறினேன். அதில் இருந்து ஒரு வார்த்தையை எடுத்துக்கொண்டு தவறான தகவலை பரப்பியுள்ளார்கள்.
unknown nodeMamitha Baiju [Image – Mamitha insta]
READ MORE –நாளை வெள்ளித்திரையில் களமிறங்க போகும் சிறிய பட்ஜெட் திரைப்படங்கள்.!
படத்தின் ப்ரீ புரொடக்ஷன், புரொடக்ஷன் என ஒரு வருடத்திற்கு மேல் பாலா சாருடன் வேலை பார்த்திருக்கிறேன். நான் ஒரு சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் உதவி செய்தார். அந்தப் படத்தில் நான் பணிபுரிந்தபோது மனரீதியாகவோ அல்லது உடல்ரீதியாகவோ எந்த விதமான துஷ்பிரயோகமான நடத்தையையும் நான் அனுபவிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். வணங்கானில் இருந்து விலக நான் மலையாளப்படத்தில் கமிட் ஆனதே காரணம், அதுபோல் நடிகர் சூர்யா சார் விலகுவதற்கு காரணம் கதை பிடிக்காமல் போய் இருக்கலாம்’ என இவ்வாறு கூறியுள்ளார்.
