நீரவ் மோடி மீது விவசாயிகள் புகார்! குறைந்த விலைக்கு நிலத்தை வாங்கி வளைத்துப்போட்ட நீரவ் மோடி …

Default Image

நீரவ் மோடி மகாராஷ்டிர மாநிலம் அகமது நகர் மாவட்டத்தில்  தங்களிடம் குறைந்த விலைக்கு வாங்கி வளைத்துப்போட்ட நிலத்துக்கு விவசாயிகள் மீண்டும் உரிமை கொண்டாடுகின்றனர்.

பஞ்சாப் நேசனல் வங்கி நிதி மோசடியில் தொடர்புடைய வைர வணிகர் நீரவ் மோடி, மகாராஷ்டிரத்தின் அகமதுநகர் மாவட்டத்தில் கண்டாலா என்னுமிடத்தில் விவசாயிகளின் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களைச் சந்தை மதிப்பைவிடக் குறைந்த விலைக்கு வாங்கி வளைத்துப் போட்டுள்ளார். இப்போது அவர் வெளிநாட்டில் உள்ள நிலையில், வறுமை காரணமாக அவரிடம் நிலங்களை அடிமாட்டுவிலைக்கு விற்ற விவசாயிகள் மீண்டும் அந்த நிலத்துக்கு வந்து அது தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி உரிமை கொண்டாடியுள்ளனர்.

இதற்கு அடையாளமாகத் தங்கள் வண்டிமாடுகளை அந்த நிலத்தில் நிறுத்தியும் கொடிகளை நாட்டியும் உரிமை கோரியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்