ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இரண்டு நாட்களில் ரூ .1,100 கோடியைத் தாண்டியது.
ஓலா குழும தலைமை நிர்வாக அதிகாரி பவிஷ் அகர்வால் இன்று தனது ட்விட்டரில், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை இரண்டு நாட்களில் ரூ .1,100 கோடியைத் தாண்டியதாகவும், இ-ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் காட்டிய உற்சாகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருந்தது என்று அவர் கூறினார்.
ஓலா எலக்ட்ரிக் மின்சார ஸ்கூட்டரை கடந்த புதன்கிழமை விற்கத் தொடங்கியது. இதில் ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஆகிய இரண்டு வகைகளில் கிடைக்கிறது. நிறுவனம் முதல் நாளில் ரூ .600 கோடி மதிப்புள்ள ஸ்கூட்டர்களை விற்றது. இரண்டு நாட்களில் விற்பனை 1100 கோடி ரூபாயை தாண்டியது என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது. மீண்டும் நவம்பர் 1 ஆம் தேதி விற்பனை தொடங்கும் என ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஓலா எஸ் 1 மற்றும் எஸ் 1 ப்ரோ ஆகிய 2 மாடல் மின் ஸ்கூட்டர்களுக்கான முன்பதிவு நேற்று நள்ளிரவுடன் முடிந்தது. நேற்று முன்தினம் ரூ.600 கோடிக்கும், நேற்று ரூ.500 கோடிக்கும் ஓலா மின் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளது. ஓலா மின் ஸ்கூட்டர் வாங்க பதிவுக்கட்டணம் ரூ.499-ம் முன்பணமாக ரூ.20,000 செலுத்தி பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown node